News December 26, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் அறிவித்தார்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Similar News

News December 27, 2025

செங்கல்பட்டு: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News December 27, 2025

செங்கல்பட்டு: 2வருட துயர் தாங்க முடியாமல் தற்கொலை!

image

சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரனாலிக் (26). பிரனாலிகின் தந்தை 2 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.அன்று முதல் தந்தை பிரிவை தாங்க முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். டிச-25 அன்று தன் கை, கால்களை கத்தியால் அறுத்து கொண்டு, வீட்டு மொட்டை மாடியிலிருந்து விழுந்துள்ளார். இரும்பு கேட்டின் மீது விழுந்ததால் சம்பவ இடத்துலயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2025

செங்கை: ஹோட்டல் மீது கார் மோதி பயங்கர விபத்து!

image

சென்னையிலிருந்து 35 வயதுள்ள நபர் ஒருவர் காரை அதிவேகத்தில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி ஓட்டி சென்றார். கார் திடீரென நிலைத்தடுமாறி மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் நிலையம் அருகே ஓட்டல் சுவரில் மோதி நின்றது. இதில் கார் முன் பக்கம் பயங்கரமாய் உடைந்தது, மேலும் காரை ஓட்டியவரும் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்த பின், போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!