News October 23, 2025

செங்கல்பட்டு: அடுத்தடுத்து பேருந்துகள் மோதி விபத்து

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலுார் நோக்கி, அரசு பேருந்து புலிப்பாக்கம் சந்திப்பு அருகில் சென்ற போது, பின்னால் சென்னை- படாளம் நோக்கி வந்த தனியார் மருத்துவக் கல்லுாரி பேருந்து, அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னை- நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதனால் யணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News

News October 23, 2025

செங்கல்பட்டில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

News October 23, 2025

செங்கல்பட்டு: ரவுடியை வெட்டிய 7 பேர் கைது

image

மேற்கு தாம்பரம், காதர்பாய் தெருவைச் சேர்ந்தவர் சீனி முகமது, 32; ரவுடி. தீபாவளியன்று இரவு ஆறு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டி விட்டு தப்பினர். வழக்கு பதிந்த தாம்பரம் போலீசார், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த செஷான், 25, இரும்புலியூரைச் சேர்ந்த கிரி, 25, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News October 23, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (அக்டோபர்-23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!