News November 25, 2024
செங்கல்பட்டுக்கு இலவச அலைபேசி எண் அறிவிப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கால்நடை பராமரிப்பு துறையின் 148 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. அரசு கால்நடை மருத்துவமனைக்கு கால் நடைகளை அழைத்து வர இயலாதவர்களுக்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முறையே 4 ஆம்புலன்ஸ்களும், 43 ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டன.கால்நடை வளர்ப்போர் கால்நடைகளின் மருத்துவத்திற்கு 1962 என்ற இலவச எண்ணை இந்த இரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 8, 2025
செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

இன்று செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 7, 2025
சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் – தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
News August 7, 2025
சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் செங்கல்பட்டு

கார் உற்பத்தி அதிகம் என்பதாலே ஆசியாவின் டெட்ராய்டு என்ற பெயர் சென்னைக்கு உண்டு. சென்னையின் இந்த பெருமைக்கு செங்கல்பட்டும் காரணம் . ஆட்டோ மொபைல் துறையில் சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மறைமலை நகரில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. *சென்னைக்கே பெருமை சேர்க்கும் நம்ம மாவட்ட பெருமையை ஷேர் பண்ணுங்க*