News April 25, 2025

செங்கல்பட்டில் 6 புதிய தடங்களில் மினி பஸ் இயக்கம்: அரசு ஆணை

image

செங்கல்பட்டில் மூன்றாம் கட்டமாக 6 புதிய தடங்களில் மினி பஸ்கள் இயக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழித்தடங்கள் விவரம் 1. மாம்பாக்கம் – காயார், 2. மதுராந்தகம் – காட்டுக்கரணை, 3. கல்யாங்குளம் – மேல்மருவத்துார், 4. தாம்பரம் மெப்ஸ் – டி.டி.கே., நகர், 5. சோழிங்கநல்லுார் – மாம்பாக்கம், 6. மண்ணிவாக்கம் காவல் நிலையம் – டி.எம்.ஜி., கல்லுாரி. பேருந்தில் செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 13, 2025

செங்கல்பட்டு: நடந்து சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!

image

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (23 வயது). இவர் சண்முகம் சாலையில் உள்ள ஒரு கைபேசி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, முகமது ரிஸ்வான் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் அவரைத் கட்டையால் தலையில் தாக்கி, அவரிடமிருந்த கைபேசி மற்றும் 400 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

News December 13, 2025

செங்கல்பட்டு: சிகிச்சைக்காக விமானத்தில் வந்த பெண் மரணம்!

image

வங்காளதேச டாக்காவிலிருந்து வந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற வந்த 32 வயதான அக்லிமா அக்தர் என்ற பெண் பயணி விமானம் சென்னை வான் எல்லையில் வந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், அவர் இருக்கையிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News December 13, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (டிசம்பர்- 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!