News November 10, 2025

செங்கல்பட்டில் 417 பேர் ஆப்சென்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறை வார்டன் ஆகிய பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 2,419 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,002 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் மீதமுள்ள 417 பேர் தேர்வு எழுதவில்லை என்று செங்கல்பட்டு போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News November 10, 2025

செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 10, 2025

செங்கல்பட்டு: இன்றே கடைசி- APPLY HERE!

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள்

image

செங்கல்பட்டு நகராட்சியில், பழைய ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றி வருவதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் ரத்த காயத்துடன் வரும் நோயாளிகளை நாய்கள் அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!