News August 13, 2025

செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

Similar News

News August 13, 2025

செங்கல்பட்டில் நாளை கடைசி!

image

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த தகுதியான நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 12, 2025

விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

image

வரும் ஆகஸ்ட் 15, 16, மற்றும் 17 ஆகிய நாட்களில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வண்டலூரை அடுத்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!