News October 15, 2025

செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையின் போது அவசர தேவைக்கு ஏற்ப 108 ஆம்புலன்ஸ்கள் தயாராக வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் (ம) ஓட்டுநர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடவும். அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களில் தீயணைக்க பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், அவசர மருந்து பொருட்கள் போதிய அளவில் வைத்திருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

செங்கல்பட்டு: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

கிளாம்பாக்கத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அக்.16 முதல் வரும் 19-ந்தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2,092 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இ.சி.ஆர் சாலை அல்லது ஓ.எம்.ஆர்., சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 15, 2025

செங்கல்பட்டு: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, செங்கல்பட்டு எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

error: Content is protected !!