News August 22, 2025

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 22) காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Similar News

News March 4, 2026

செங்கல்பட்டு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

செங்கல்பட்டு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 4, 2026

குஷியில் மதுராந்தகம் மக்கள்!

image

மதுராந்தகத்தில் 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பிப்ரவரி 2024ம் வருடம் பூமி பூஜை போடப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேலை தொடங்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற இருக்கிறது. பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

News March 4, 2026

செங்கல்பட்டு: செல்வப்பெருந்தகை- முதல்வர் சந்திப்பு!

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகள் அக்சயா பிரியா – டாக்டர் ஆர்ஜன் ராயர் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று (மார்ச். 3) இரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினர். தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!