News January 7, 2026

செங்கல்பட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

image

செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் விஜயராஜா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கார்த்திகேயனின் மகன் நவீன் (9), பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பாட்டியுடன் இருந்துள்ளார். அப்போது பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபோது 8-வது மாடி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

image

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண்: (06003) தாம்பரத்திலிருந்து வரும் ஜன.31 ந்தேதி இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மேலும் இந்த ரயிலில் படுக்கை வசதி இல்லை என்றும் முழுவதும் அமர்ந்து செல்லும் வகையிலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின்” நலன் காக்கும் நாள் கூட்டம் ‘ஜனவரி 30 காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.

News January 30, 2026

செங்கை: கிரகப்பிரவேசம் செய்த வீடே எமனானது

image

திருக்கழுக்குன்றம் வகாப் நகரைச் சேர்ந்த மின் ஊழியர் பிரபு, நாவலூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி சமீபத்தில் குடியேறினார். இதற்காக வாங்கிய அதிகப்படியான கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த அவர், ஜன-28 தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பவானி அளித்த புகாரின் பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!