News January 7, 2026
செங்கல்பட்டில் துடிதுடித்து பலி!

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சக்திவேல் (39), நேற்று வண்டலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலைத் தடுப்பில் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
செங்கை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News February 11, 2026
பல்லாவரம்: பாலியல் சீண்டல் வழக்கில் ஒருவர் கைது

பல்லாவரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஒரு காயலான் கடையில் வேலை செய்யும் நபருடன் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் அதிகமாகி, அந்த நபர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் தந்தை, பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அனகாபுத்துாரை சேர்ந்த டோனி (எ) மார்க்கஸ் (20) என்பவரை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
News February 11, 2026
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


