News December 17, 2024
செங்கல்பட்டில் தற்காலிகமாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்து 2 கி.மீ தொலைவில் உள்ளது தையூர் ஊராட்சி, வடகிழக்கு பருவமழை பெய்யும் போது இங்குள்ள ஏரி முழுவதும் நிரம்பி தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி பொதுமக்களை கவர்ந்து வருகிறது. எட்டு அடி உயரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஆனந்த குளியல் குளித்து மகிழ்கின்றனர். இந்த வாரம் முழுவதும் தண்ணீர் வரும் என்று தெரிகிறது.
Similar News
News August 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
News August 5, 2025
செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <