News October 18, 2024

செங்கல்பட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 40க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்றனர். இந்த முகாமினை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகாச்சலம் தொடங்கி வைத்தார். தேர்வாகும் நபர்களின் விபரம் விரைவில் வெளியாகும்.

Similar News

News July 9, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (08/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள.

News July 8, 2025

விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் பேர் பயணம்

image

சென்னை விமான நிலையத்தில் மே மாதம் 13449 விமானங்களில் 20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருப்பதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 12958 விமானங்களில் 19 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, டெல்லி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

News July 8, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
வாடகை வீடு மோசடிகளில் சிக்காமல் இருக்க செங்கல்பட்டு காவல்துறை சில வழிகளை கூறியுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். போலியான முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்யவோ, பணம் கொடுத்து ஏமாறவோ வேண்டாம். இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் ☎️ 7200102014.

error: Content is protected !!