News February 4, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் இன்று ( பெப்ரவரி 4) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது .
Similar News
News February 11, 2026
செங்கல்பட்டு: ஒண்டர்லா சென்றவர்கள் துடிதுடித்து பலி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத் (25). இவர், தன் தோழியான ஆவடியைச் சேர்ந்த சுவேதா (25) என்பவருடன், நேற்று பைக்கில் ஒண்டர்லா சென்று கொண்டிருந்தனர். கீழ்கல்வாய் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை வளைவு பகுதியில் சென்றபோது, நெல்லிக்குப்பத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
News February 11, 2026
செங்கல்பட்டில் கூண்டோடு கைது!

செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அலுவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்புச் சட்டம், 10 சதவீத ஓய்வூதிய பிடித்தம் ரத்து, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News February 11, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

சிங்கபெருமாள் கோவில் அடுத்த பாரேரியை சேர்ந்தவர் கோபால் (48). இவர், தன் வீட்டிலிருந்து பைக்கில் மகேந்திரா சிட்டிக்கு சென்றுள்ளார். அப்போது ஜி.எஸ்.டி., சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்ற போது பின்னால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


