News September 18, 2024
செங்கல்பட்டில் அக்.2ஆம் தேதி தசரா பண்டிகை தொடக்கம்

செங்கல்பட்டு நகரில் 135 ஆண்டுகளுக்கு மேலாக தசரா பண்டிகை நடைபெற்று வருகிறது. இந்தப் பண்டிகையானது, செங்கல்பட்டு பகுதி மக்களின் அடையாளமாக உள்ளது. இந்தாண்டுக்கான தசரா பண்டிகை வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த தசரா பண்டிகையை முன்னிட்டு, ராட்டினங்கள் பொழுதுபோக்கு உபகரணங்கள் செங்கல்பட்டு நகருக்கு லாரிகள் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 18, 2025
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <