News October 21, 2024

செங்கல்பட்டிலிருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை

image

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரை காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக காலை 4.20 மணிக்கும், பிற்பகல் 12.00 மணிக்கும் செல்லும் காற்று மாசுபாடு இல்லாத பேருந்தினை மக்களின் பயன்பாட்டிற்காக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர்மன்ற தலைவர் தேன்மொழிநரேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். அந்த பேருந்தில் பழைய பேருந்து நிலையம் வரை பயணச்சீட்டு பெற்று பயணித்தனர்.

Similar News

News August 14, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில் கிளிக் <<>>செய்து செங்கல்பட்டில் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் (13/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 14, 2025

கோவளத்தில் வாட்டர் மெட்ரோ வரப்போகிறது

image

கொச்சியை போல சென்னை கோவளத்தில் வாட்டர் மெட்ரோ கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
நீர்வளத் துறை (WRD) வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதன் முதல்கட்டமாக கூவம் நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரப்படும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!