News October 19, 2025

செங்கல்பட்டிற்கு ஆரஞ்ச் அலெர்ட்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி செங்கல்பட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 19, 2025

செங்கல்பட்டு: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை காலியாக 348 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்.

News October 19, 2025

செங்கல்பட்டு: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம்.

News October 19, 2025

செங்கல்பட்டு: சொந்த ஊர் சென்றவர் பேருந்து மோதி பலி

image

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஜீவிதா (22) ஒரகடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தார். நேற்று (அக்.18) இவர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தனது நண்பர் சுபாஷ் என்பவருடன் டூவீலரில் சென்றார். அப்போது மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியதில் ஜீவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!