News January 10, 2026
சூலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நேற்று ரங்கநாதபுரம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 12, 2026
BREAKING: உக்கடத்தில் பேருந்துகள் இயங்கவில்லை

தொழிலாளர் சட்டங்களை நீக்க கோரி இன்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று கோவை-உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழக பேருந்துகளும் கேரள எல்லை வரை மட்டுமே சென்று வருகின்றன. இதனால் கேரளா செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
News February 12, 2026
கோவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


