News March 2, 2026
சூலூர் அருகே கார் மோதி குழந்தை பலி

சூலூர் நடுப்பாளையத்தில் ஆரோக்கியதாஸின் ஒன்றரை வயது மகள் ஜோஸ்லின், பெரியப்பா ஆண்ட்ரூஸ் காரை பின்புறமாக இயக்கியபோது எதிர்பாராத விதமாக மோதி பலியானார். குழந்தை பின்னால் இருப்பதை அறியாமல் காரை எடுத்ததால் இந்தச் சோகம் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது <
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
வெள்ளியங்கிரி செல்வோர் கவனத்திற்கு

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் புனிதத்தைப் பேணும் வகையில், செருப்பு மற்றும் ஷூ அணிந்து மலை ஏறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
News March 2, 2026
கோவை: அதிமுகவில் இணைந்த தவெகவினர்

கோவை வடக்கு தொகுதி பூசாரிபாளையத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ அம்மன் K.அர்ச்சுணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், பகுதி செயலாளர் நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இணையும் நிர்வாகிகளுக்குச் சால்வை அணிவித்து அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.


