News October 26, 2025
சூரசம்ஹாரம் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பக்தர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அன்று தனிநபர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
தூத்துக்குடி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News October 26, 2025
தூத்துக்குடி: சூரசம்ஹாரத்துக்கு.. இதை பண்ணுங்க!

அசுரன் சூரபத்மனை சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், 6வது நாள் போரில் சூரனை அழித்ததே சூரசம்ஹாரம். இத்தைகைய சிறப்பு வாய்ந்த நாள் நாளை அதில் நாம் என்ன செய்ய வேண்டும்.
1. செய்ய வேண்டியவை
ஓம் சரவண பவ, முருகா என்று உச்சரியுங்க
ஒரு நாள் விரதமாவது இருக்க வேண்டும்
சூரசம்ஹாரம் பின் கடலில் நீராடுதல்.
2. செய்யகூடாதவை
அசைவம்
கோபம்
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE!
News October 26, 2025
தூத்துக்குடி: அக்.28 மின் தடை; உங்க பகுதி இருக்கான்னு பாருங்க!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களுக்கு நாளை மறுநாள் (அக்.28) மின் தடை செய்யப்பட உள்ளது. கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர். காலனி, வெள்ளப்பனேரி, குருவிக்குளம், எப்போதும் வென்றான், மேலும் பல பகுதிகளில் மின்தடை செய்யபட உள்ளது. இங்கு <


