News January 20, 2026
சூடுபிடிக்கும் தங்கம் திருட்டு வழக்கு: 21 இடங்களில் ரெய்டு

<<18345270>>சபரிமலையில்<<>> தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய 21 இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் தங்க முலாம் பூசும் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது.
Similar News
News January 30, 2026
அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த நிதிஷ் குமார்

பிகாரில் அரசு ஊழியர்களின் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில், பொது ஊழியர் நடத்தை (திருத்தம்) விதிகள் 2026-க்கு நிதிஷ் குமார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் தொடங்குவதற்கு முன்பு தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெறவும், புனைப்பெயரில் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பது தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
ஜனவரி 30: வரலாற்றில் இன்று

1948 – நாதுராம் கோட்சேவால் தேசப்பிதா மகாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டார். 1976 – தமிழ்நாட்டில் கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. 2020 – COVID-19ஐ உலக சுகாதார நிறுவனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. 1950 – முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த தினம். 1874 – ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் நினைவு தினம்.
News January 30, 2026
பேனரை கழற்றிய போலீஸை சாடிய பிரேமலதா

பேனரை கழட்டி வைத்துவிட்டால், தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியாதா என பிரேமலதா கேள்வி எழுப்பினார். தென்காசியில் பேசிய அவர், போஸ் என பெயர் வைத்துவிட்டு, கேப்டன் கட்சியிடம் இப்படி செய்தால் உங்களுக்கு தான் கெட்டப்பெயர் வரும் என்றும், ஒரு சிலரின் நடவடிக்கையால் மொத்த போலீஸ் டிபார்மெண்ட்டுக்கும் கெட்டப்பெயர் என்றும் சாடினார். மேலும், பேனரை கழற்றினால் மட்டும் தேமுதிகவை அழிக்க முடியாது எனவும் கூறினார்.


