News September 18, 2025

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி

image

காஞ்சான்காடு பகுதியை சேர்ந்த பிரவின் ஜோஸ் உட்பட 6 பேர்    சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் தனியார் டிராவல் ஏஜென்சியிடம் ரூ3,36,400 அளித்துள்ளனர். ஒரு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததால் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின்தாஸ் உட்பட 2 பேர் மீது  வழக்கு தொடரப்பட்டது. அதில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் களியக்காவிளையில் அகஸ்டின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 15, 2025

குமரி: மாமியாரை தாக்கிய Ex. ராணுவ வீரர்

image

மாத்தார் தத்தன் விளையை சேர்ந்தவர் தங்கலெட் (64). இவரது மகளின் கணவர் கொல்வேலைச் சேர்ந்த Ex. ராணுவ வீரர் கிளீட்டஸ் (43). மகளுக்கும் கிளீட்டசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வெளியூரில் உள்ளார். 2 நாட்கள் முன்பு கிளீட்டஸ் மாத்தாரில் தங்கலெட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். காயமடைந்த தங்கலெட் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி. நேற்று திருவட்டார் போலீசார் கிளீட்டசை கைது செய்தனர்.

News November 15, 2025

குமரி:இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 15, 2025

குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

image

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!