News August 12, 2025
சுரண்டை விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தென்காசி, சுரண்டையை சேர்ந்த முத்துக்குமார் (25). நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு போனை அணைத்துவிட்டார். உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை பரங்குன்றாபுரம் பாலத்தில் மயங்கிய நிலையில் கிடந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News September 27, 2025
தென்காசி: உங்க மொபைல் தொலைந்துவிட்டதா..இதோ தீர்வு

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News September 27, 2025
தென்காசி: பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த திருமலையாச்சி (75) என்பவர் சுரண்டையிலிருந்து சேர்ந்தமரம் செல்ல அரசுப் பேருந்தில் பயணித்தார். சுரண்டை அருகே ஆலடிப்பட்டி விலக்குப் பகுதியில் பேருந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுரண்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 27, 2025
தென்காசி:10th முடித்தால் ரூ.35,000த்தில் வேலை உறுதி.!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு <