News November 25, 2025
சுபமுகூர்த்தம்.. பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினமான நவ.27-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. மேலும் அதிகளவு ஆவணப் பதிவுகள் நடக்கும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
‘காதலர் தினம்’ நடிகை மீது கேஸ் போட்ட விவசாயி

‘காதலர் தினம்’ சோனாலி பிந்த்ரே & அவரது கணவர் மீது விவசாயி ஒருவர் நில அபகரிப்பு வழக்கு தொடுத்துள்ளார். புனேவின் மாவலில் உள்ள தனக்கு சொந்தமான 75 சென்ட் பூர்விக நிலத்தை நடிகையும் அவரது கணவரும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததுடன் மிரட்டுவதாகவும் சந்திரகாந்த் ஷிண்டே என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சோனாலி பிந்த்ரே, பணம் பறிக்க பொய் வழக்கு போட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
News April 3, 2026
₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. APPLY NOW

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News April 3, 2026
வாஜ்பாய்க்கு முரட்டு அடிமை கருணாநிதி: EPS

கருணாநிதி யாருக்கு முரட்டு பக்தராக இருந்தார் என மக்களுக்கு தெரியும் என்று EPS விமர்சித்துள்ளார். மோடியின் முரட்டு பக்தர் EPS என <<19537003>>உதயநிதி<<>> பேசியதற்கு பதிலடி கொடுத்த அவர், இதை கண்டுபிடித்ததற்காக உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் எனவும் கிண்டலடித்தார். மேலும், கருணாநிதி அப்போதைய PM வாஜ்பாய்க்கு முரட்டு பக்தனாக இருந்ததாகவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


