News April 26, 2025
சுந்தரவடிவேல் சுவாமிகளின் ஆருடம் நடக்குமா?

2026 தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும், திமுக அமைச்சர்களின் நாக்கில் சனி இருப்பதால் பலர் ஜெயிலுக்குப் போவார்கள். 2027க்கு பின் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் காலம் வரும் என்று தேனி மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார், 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் இவர் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தேனி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
தேனி: ஒரு மாத பெண் குழந்தை உயிரிழப்பு

உப்புத்துறையை சேர்ந்த ராஜ்குமார் – ஜெயலட்சுமி தம்பதிக்கு அக்.2.ல் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் குழந்தைக்கு இருதயம், மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. நவ.5 மதியம் முதல் பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அன்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 7, 2025
தேனியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில் நவ.8 அன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


