News August 14, 2024
சுதந்திர போராட்ட தியாகி 103 வயதில் காலமானார்

ஒசூர் அடுத்த பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா “வெள்ளையனே வெளியேறு” “உப்பு சத்தியா கிரகம்” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா முன்னாள் முதல்வர் காமராஜர், கக்கன் ஆகியோரிடம் நன்கு பழகியவர். இன்று 103 வயதில் வயது மூப்புக்காரணமாக காலமானார். அவருக்கு பல தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அதிக அளவில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வருகிறது. பேருந்து பயணத்தின் போது ஜன்னல் வழியாக பயணிகள் கை கால் தலைகளை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் உங்களிடம் இருந்து தொலைபேசி நகை பணம் கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
News October 28, 2025
கிருஷ்ணகிரி சுற்றுப் பகுதியில் நாளை மின்தடை

கிருஷ்ணகிரி 110/33-11 கேவி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு, கலெக்டர் அலுவலகம், கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக்.27 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


