News August 7, 2025
சுதந்திர தின விழா குறித்த ஆலோசனைக் கூட்டம்

சுதந்திர தின விழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, தலைமையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ், காவல்துறை துணை ஆணையர் (சேலம் தெற்கு) கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 7, 2026
எடப்பாடியில் தவெக வேட்பாளர் மாயம்? – போலீசார் பேச்சுவார்த்தை!

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணவில்லை எனக் கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூச்சலிட்டு தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
News April 7, 2026
சேலத்தில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News April 7, 2026
BREAKING: எடப்பாடி பழனிச்சாமி மனு ஏற்பு

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனைக்குப் பின் அவரது மனு ஏற்கப்பட்டது. இவர் இத்தொகுதியில் இது 8-வது முறையாக போட்டியிடுகிறார்.


