News August 8, 2024
சுதந்திர தின நிகழ்ச்சி ஆட்சியர் ஆலோசனை

ஈரோடு மாவட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அவற்றின் கொண்டாடுவது பற்றிய அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் சதீஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 18, 2025
ஈரோடு: பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு: கனகபுரம் கொமராபாளையத்தை சேர்ந்த குமாரின் மனைவி பாப்பாத்தி (54). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அறச்சலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 18, 2025
ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று செப்டம்பர் 18 அன்று பவானி கோபி நம்பியூர் பெருந்துறை தாளவாடி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே மக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
News September 18, 2025
ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.