News March 13, 2025
சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கத்தில் வரும் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அவர்தான் வாரிசுகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 4, 2026
ராணிப்பேட்டையில் 250 கோழிகள் இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News April 4, 2026
ராணிப்பேட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News April 4, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டையில் வருகிற 23-ந்தேதி தேர்தலும், மே மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதனால் மதுபான சில்லறை விற்பனை கடைகள் ராணிப்பேட்டையில் ஏப்-21-ந்தேதியில் இருந்து ஏப்-23-ந்தேதி வரை (3 நாட்கள்) முழுமையாக மூடப்பட வேண்டும். மேலும் மே-4 அன்று (வாக்கு எண்ணிக்கை நாள்) மாநிலம் முழுவதும் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


