News October 13, 2024
சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மயங்கி விழுந்து பலி

கடம்பத்தூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் இவர் வேப்பம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 9-ந் தேதியன்று மயங்கி கீழே விழுந்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில் இரத்த அழுத்ததாள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
Similar News
News August 16, 2025
திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News August 16, 2025
திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.16) காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாலா என்பவரை செவிலியர் மீரா, கன்னத்தில் அறைந்துள்ளார். மருத்துவர் அறையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக செவிலியர் மீரா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
News August 16, 2025
திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <