News November 8, 2024

சுகாதார ஆலோசகர் அதிகாரி பணி வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் EMRI green health service கீழ் செயல்பட்டு வரும் 102 தாய் சேய் சேவை மையத்தில் சுகாதார ஆலோசகர் அதிகாரியாக பணி செய்ய ஆட்கள் தேர்வு நாளை 09.11.2024 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.14,000 என கூறப்பட்டுள்ளது. 

Similar News

News September 24, 2025

தருமபுரி அருகே எஸ்எஸ்ஐயை கைது

image

தர்மபுரி அருகே, கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளிய எஸ்எஸ்ஐயை கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டப்பட்டியை சேர்ந்த கோமதி (28) கணவரின் தொல்லை காரணமாக புகார் அளிக்க சென்றபோது ராஜாராமுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவரம் ராஜாரம் மனைவிக்கு தெரிந்தால், பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி கோமதியை கோயிலுக்கு அலைத்து சென்று கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றுள்ளார். புகாரின் பேரில் ராஜாராமை போலீசார் கைது செய்தனர்.

News September 24, 2025

தருமபுரி அருகே மூதாட்டி சடலமாக மீட்பு

image

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் வனப்பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்திற்கு முன் வேலூர் மாவட்டம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த விஜயகுமாரை விசாரித்த போது, அவர் தனது உறவினரான வெள்ளச்சி (63) என்ற மூதாட்டியை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த மூதாட்டியின் உடல் சிட்லிங் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

News September 24, 2025

தர்மபுரி: மனைவியுடன் தகராறு; உயிரை மாய்த்த Ex.ராணுவ வீரர்

image

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மனைவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மனம் உடைந்த சுப்பிரமணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து, தர்மபுரி நகர காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!