News June 20, 2024

சீர் மரபினருக்கு நலத்திட்ட உதவிகள் அறிவிப்பு

image

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18-60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத, குடும்பத்தில் ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 07.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 7, 2025

தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சிறை

image

ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் 2023.அக்.1ல் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது செய்த நிலையில் இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.6) முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News November 7, 2025

தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தேனியில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!