News August 16, 2024

சீர்மரபினர் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு சீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சீர் மரபினருக்கான வீட்டு மனை பட்டா வழங்கல், வீடு கட்ட நிதியுதவி வழங்கல் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கு சீர்மரபினர் www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் (அ) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539760>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

கிருஷ்ணகிரி: பெண் பிள்ளை உள்ளதா? APPLY NOW! (2/2)

image

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் ஒரு ‘குட்டி இங்கிலாந்து’

image

கிருஷ்ணகிரி நகரத்தில் இருந்து 77 கி.மீ தொலைவில் தளி பூங்கா மற்றும் ஏரி அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள இந்த கிராமமானது முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் எப்போதும் குளிர்ச்சியான சூழலே இருக்கும். ஆங்கிலேயர்களுக்கு இந்த இதமான சூழல் இங்கிலாந்தை நினைவுப்படுத்தியதால் இதனை ‘குட்டி இங்கிலாந்து’ என அழைத்தனர். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!