News April 3, 2024

சீர்காழி அருகே தீ பற்றி எரிந்த வீடு

image

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சி தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள் செல்லையா இவரது வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்கசிவினால் கூரை வீடு தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

Similar News

News February 1, 2026

மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறையில் பாரா மெடிக்கல் படிப்பிற்கு நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் மண்டல செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கட்சினர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

News February 1, 2026

மயிலாடுதுறை: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க

News February 1, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு வலைப்பழுது பார்த்தல், வலைகளை மறுசுழற்சி செய்தல், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04364-271455, 7904428026, 6369864872 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!