News February 25, 2025
சீர்காழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த 3 1/2 வயது பெண் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று உணவு இடைவெளியின் போது கை கழுவ சென்ற போது 17 வயது சிறுவன் அங்கன்வாடிக்கு பின்புறம் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சிறுமி அலறவே செங்கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளான். சிறுமி மருத்துவமனையில் அனுமதி. கொள்ளிடம் போலீசார் சிறுவனை போக்சோவில் கைது செய்தனர்.
Similar News
News April 19, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தங்கள் வாட்ஸ்அப்பிற்கு ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் 5ஜி நெட்வொர்க் என்ற பெயரில் ஏதேனும் APK கோப்பு வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. உறவினருக்காலுக்கும் ஷேர் செய்யுங்கள்
News April 19, 2025
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு உதவித்தொகை

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை விண்ணப்பிக்க மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று இலவச படிவத்தை பெற்று கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை மே 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 19, 2025
இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறையில் அனைத்து வகை கனிமங்களும் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைசீட்டுகளை இனிமேல் இணைய வழி வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள நடைசீட்டுக்கள் வழங்கும் முறை 30ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக குத்தகைதாரர்கள் நடைசீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.