News August 28, 2025

சீர்காழி அருகே குருணை மருந்து வைத்ததில் 20 நாய்கள் இறப்பு

image

கொள்ளிடம் அருகே மயில கோவில் கிராமத்தில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் ஆட்டு இறைச்சியில் குருணை மருந்தை கலந்து ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் வைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என மொத்தம் 20 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 28, 2025

மயிலாடுதுறை: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு 044–25342441 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றர்.

News August 28, 2025

மயிலாடுதுறை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04364 290760) அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்!

error: Content is protected !!