News January 9, 2025

சீர்காழியில் தைவான் நாட்டினருக்கு இந்து முறைப்படி திருமணம்

image

சீர்காழி அடுத்த காரைமேட்டில் அமைந்துள்ள ஓலிளாயம் சித்தர் பீடத்தில் தைவான் மணமக்களான இன்மிங்-சுஹூவா ஆகிய இருவரும் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு இருவரின் உறவினர்கள் பட்டு வேட்டி சேலை அணிந்து இந்து முறைபடி யாகம் வளர்த்து தாலி கட்டி திருமணம் செய்து வைத்தார்கள் இதில் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அனைவருக்கும் சேலை வேட்டி இனிப்புகள் வழங்கினார்கள்.

Similar News

News December 9, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News December 9, 2025

மயிலாடுதுறையில் பெருமைமிக்க அருங்காட்சியம்!

image

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் ஆகும். இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், புத்தர் சிலை, சிலம்பு, அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள் போன்றவை உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 9, 2025

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT!

error: Content is protected !!