News September 8, 2025
சீர்காழியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 6 இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணிக்கான தேர்வு சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் அருள்ஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஹரிஹரன் மேற்பார்வையில் 6 பணியிடங்களுக்கு 314 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 89 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Similar News
News September 8, 2025
மயிலாடுதுறை நகராட்சி சார்பில் அறிவிப்பு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரானது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிகண்டநல்லூரிலிருந்து நீர் கொண்டு வரப்படும் குழாயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக வருகிற செப்.,10-ம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் நீர் ஆதாரத்திலிருந்து நீர் வழங்கப்படும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
News September 8, 2025
மயிலாடுதுறை: இலவச சட்ட ஆலோசனை வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
மயிலாடுதுறை: 10th போதும் ரூ.69,100 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள் <