News September 3, 2025

சீருடை பணியாளருக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2ம் நிலை காவலர், 2ம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. விருப்பம் உடையவர்கள் 04633213179 என்ற தொலைபேசி எண் வாயிலாக (அ) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறவும்.

Similar News

News September 4, 2025

தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

image

தென்காசி ரயில் நிலையத்தில் இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.

News September 4, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (செப்.3) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

தென்காசி: ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு

image

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவல் பணியிடங்கள் சுழற்சி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnrd.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி:30.09.2025 . *ஷேர்

error: Content is protected !!