News January 10, 2025
சீமான் மீது கோவையில் வழக்கு பதிவு

தந்தை பெரியாரை அவமரியாதையாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கோவை போத்தனூர் காவல் நிலையத்தில், இன்று வழக்கு பதிவு செய்தனர். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ், மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
News December 11, 2025
கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
News December 11, 2025
கோவை மக்களே: இன்று இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், பிஎஸ்ஜி எஸ்டேட் (ம) மருத்துவமனை, பீளமேடுபுதூர், புலியகுளம், பங்கஜாமில், பாரதிபுரம், செளரிபாளையம், உடையாம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, எஸ்.எஸ்.குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், அக்ரகார சாமக்குளம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


