News January 5, 2026
சீனாவை முந்தியது இந்தியா

அரிசி உற்பத்தியில் சீனாவை இந்தியா முந்திவிட்டதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். சீனாவின் அரிசி உற்பத்தி 145.28 மில்லியன் டன்களாக உள்ள நிலையில், இந்தியா 150.18 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளது என தெரிவித்தார். மேலும் உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் அதனை வழங்கி வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Similar News
News February 6, 2026
அமைச்சர் மீது கடும் கோபத்தில் CM ஸ்டாலின்

நேற்று CM ஸ்டாலின் பங்கேற்ற கைவினை கலைஞர்களுக்கான விருதுகள் விழாவிற்கு அமைச்சர் காந்தி வரவில்லை. அதிர்ச்சியடைந்த CM ஸ்டாலின், அமைச்சரிடம் விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகம் சென்ற அமைச்சர் காந்தியை CM ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாகவும், விளக்கம் சொல்ல முயன்றபோது வாயை மூடும்படி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சரின் முகம் வாடியதாம்.
News February 6, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்!

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும் *பெண்களின் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது * நிலத்தை பயன்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான்.
News February 6, 2026
கோடிகளில் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: அனிருத்

கோலிவுட்டில் ஒரு படத்திற்கு இசையமைக்க ₹8 முதல் ₹10 கோடி சம்பளம் வாங்குபவர் அனிருத். இந்நிலையில், சிறுவயதில் கல்யாணங்களுக்கு வாசிக்க சென்ற போது ₹500 சம்பளம் தருவார்கள் என்ற அவர், சில சமயங்களில் வெற்றிலை பாக்கு கொடுத்து நன்றிகூறி வீட்டுக்கு அனுப்புவார்கள். ₹500 ரூபாய் பெற்ற போது கிடைத்த சந்தோஷம், தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கிடைப்பதில்லை என அனிருத் வருந்தியுள்ளார்.


