News September 3, 2025
சீட் பெல்ட் அணிவோம்! பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்!!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்வோம். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில், பயணம் மேற்கொள்ள வேண்டும் என சமூக தளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். எனவே, அனைவரும் இதை ஒரு பழக்கமாக கடைப்பிடிப்பது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.
Similar News
News September 3, 2025
திண்டுக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 04-09-2025 வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், வடமதுரை ராஜ் மஹால், , நிலக்கோட்டை மேட்டுப்பட்டி ஆஞ்சிநேயா மஹால், எஸ். நத்தம் கோட்டையூர் மந்தை திடல், பழனி எரமநாயக்கன்பட்டி வி.பி.ஆர்.சி கட்டிடம், சாணார்பட்டி இராமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
News September 3, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் அவர்களது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 3, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் மாற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் நலம் கருதி இன்று மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்துள்ளார். மோகன் தற்பொழுது தனி வட்டாட்சியர், சந்திரன் தனி வட்டாட்சியர் நிலக்கோட்டை, முத்து விஜயபாண்டியன் தனி வட்டாட்சியர்(ஆ.தி ந), நவநீதகிருஷ்ணன் தற்பொழுது மதுபான கிடங்கு மேலாளர், சித்ரா தற்பொழுது வட்ட வழங்கல் அலுவலர் ஒட்டன்சத்திரம், பாமா தலைமை உதவியாளர்( ம.ஆ.அ)- மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.