News November 5, 2024

சி.வி. சண்முகத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

image

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சி.விசண்முகம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கான மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து, விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News August 17, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் வரும் ஆக. 22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,10th, 12th ITI, அல்லது டிகிரி முடித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9442208674 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

விழுப்புரம் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

image

விழுப்புரம் மக்களே மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் பற்றி காண்போம். ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <>இந்த இணையதளம்<<>> அல்லது 1930 எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் IT

News August 17, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!