News June 15, 2024

சிவப்பு பட்டுடுத்தி ஊஞ்சலில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்

image

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவின் 4ம் நாளான இன்று சிவப்பு நிற பட்டுடுத்தி மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் 100 கால் மண்டப ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினர். ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் ஓதுவாரால் ஓதப்பட்டு தீபாராதனை முடிந்து பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைந்தார்.

Similar News

News March 2, 2026

மதுரை: கார் – வேன் மோதல்; ஒருவர் பரிதாப பலி.!

image

மதுரை சிக்கந்தர் சாவடி பொற்கொடி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வருகையில், வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர் கார் மீது எதிரே வந்த பால் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 2, 2026

மதுரை இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

மதுரை: பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்த மோடி

image

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், குடும்பச் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.

error: Content is protected !!