News February 18, 2025

சிவகிரி: ஐகோர்ட் உத்தரவு – ஆவணங்களை வழங்கிய வங்கி

image

சிவகிரியில் மாரிதுரை என்பவர் கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும், ஆவணங்களை தர மறுத்து கூடுதல் பணம் செலுத்தக் கூறியதாக தொடர்ந்த வழக்கில் தனியார் வங்கி மேலாளருக்கு உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது. மேலும் வாடிக்கையாளரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆவணங்களையும் அபராதத் தொகையையும் வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து வங்கி பணியாளர்கள் அவரது வீட்டிற்கு நேற்று(பிப்.17) நேரில் சென்று அவற்றை வழங்கினர்.

Similar News

News September 29, 2025

தென்காசி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

சாம்பவர்வடகரையில் இன்று பெரியகுளம் ரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் பேஷன் டிசைனர் டெய்லர் முகம்மது மைதீன் விபத்து ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யபட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 29, 2025

தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News September 29, 2025

தென்காசி: மீண்டும் ஒற்றை யானை வருகை!

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா வடகரை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளன. தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று நேற்று இரவு மீண்டும் தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!