News December 21, 2025

சிவகிரி அருகே சோகம்: இளம்பெண் உயிரிழப்பு!

image

சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா (26). இவருடைய கணவர் கவுதம். நதியா வீட்டில் ஐடி வேலை பார்த்து வந்தார். நள்ளிரவு 2 மணி வரை வேலை பார்த்த அவர் பின்னர் தூங்கச் சென்றுவிட்டார். காலை 11 மணி அளவில் அவரை எழுப்பிய போது அசைவற்று இருந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நதியா உயிரிழ்ந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News December 21, 2025

கோபி: செங்கோட்டையனை எதிர்த்து மனு!

image

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என்ற சூழலில் தற்போது சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவரின் அண்ணன் மகன் கே.கே. செல்வன் அதிமுக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். உடன் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

News December 21, 2025

ஈரோடு: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

image

ஈரோடு மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். யாருக்காவது உதவும் இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

News December 21, 2025

ஈரோடு: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் பெண்கள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும்,சந்தேகம்  ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்புக்கு இலவச தொலைபேசி எண். 1930 அழைக்கவும்

error: Content is protected !!