News April 26, 2025
சிவகாசி: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2021 முதல் 2025 வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கவிதா பாண்டியராஜன். இந்த ஊராட்சியில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவை நிதியை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறி யூனியன் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 26, 2025
பட்டாசு ஆலை விபத்துக்கு முற்றுப்புள்ள எப்போது? – டிடிவி

சிவகாசி பட்டாசு விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்கள் தொழிலாளர் தினமான மே.1 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகள் செயல்பட்டால் மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் பலி

சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் செயல்படும் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் சற்றுமுன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் சேதமன நிலையில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் இதில் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.