News December 14, 2025
சிவகாசி: முத்தம் கொடுத்து மிரட்டியவர் கைது

சிவகாசி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமனமாகி மனைவி உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியை ஒரு ஆண்டாக காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அதை படம் எடுத்து மிரட்டி வருவதாக மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
திருச்சுழி அமைச்சரின் தொகுதிக்கு கூட கொண்டு வரவில்லை – பேச்சு

மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், 60 ஆண்டுகால கோரிகையான காவேரி, குண்டாறு திட்டத்திற்காக ரூ.14500 கோடி அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். அதில் 262 கிமீட்டரில் வெறும் 8 கிமீ மட்டுமே வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் தொகுதியில் உள்ள குண்டாறுக்கு கூட அந்த திட்டத்தை கொண்டுவர முடியவில்லை என்றார்.
News March 1, 2026
விருதுநகர்: 23 காலி பணியிடங்களை அறிவித்த ஆட்சியர்

விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்ராப், காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. ஆர்வமுள்ள 35 வயதிற்குட்பட்டவர்கள் மார்ச்.6 க்குள் www.virudhunagar.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <


