News October 17, 2025
சிவகாசி: பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி பகுதியில் பாரைபட்டி கிராமத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மிஷின் திரி தயாரிக்கப்பட்டதும், ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டதும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிவகாசி போலீசார், சஞ்சீவ்பாபு, செல்வகுமார் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 9, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News December 9, 2025
விருதுநகர்: ரூ.10 லட்சம் பரிசு வேண்டுமா… கலெக்டர் அறிவிப்பு

ஒற்றைப் பயன்பாடு நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சிய சுகபுத்ரா தெரிவித்துள்ளார். முதல் பரிசாக ரூபாய் 10 லட்சம் இரண்டாம் பரிசாக ரூபாய் 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர் பிரிவை சார்ந்த மாணவ மாணவியர்கள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க:http://umis.tn.gov.in


