News March 29, 2025
சிவகாசி பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை (மார்ச்.30) இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து வழிபடுவர். அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
Similar News
News February 11, 2026
FLASH: சிவகாசி கொலை; மனைவி உட்பட 5 பேர் கைது

சிவகாசி அருகே புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் அடித்து கொலை செய்த சம்பவத்தில் புதுக்கோட்டை சங்கர், ராஜேஷ்வரன், முத்துப்பாண்டி, மணிசங்கர், கொலையான ரமேஷின் மனைவி பிரியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னை பிரிந்து சங்கர் என்பவருடன் வாழ்ந்து வந்த தனது மனைவி பிரியாவை அழைக்க வந்த ரமேஷை சங்கர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
News February 11, 2026
விருதுநகர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News February 11, 2026
விருதுநகரில் மட்டுமே கிடைக்கும்…அதிசயம்!

விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர் பண்ணுங்க


