News February 27, 2026
சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்தப்பா

சிவகாசி அருகே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து தனியாக இருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தப்பா உறவு முறையான முருகன்(46), பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News March 10, 2026
சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு கடைகள் – அதிர்ச்சி

சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பள்ளி அருகே சுமார் 200 மீட்டர் தூரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அருகே பட்டாசு கடைகளுக்கு விதியை மீறி உரிமம் வழங்கப்பட்டதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 10, 2026
BREAKING விருதுநகரில் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தினசரி 700 வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில் 2 நாட்களாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது.
News March 10, 2026
விருதுநகர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

விருதுநகர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.


